நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார்.
இளைஞர்
தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (32). படித்த பட்டதாரியான இவர். வேலைக்கு போகாமல் வீட்டுலையே இருந்துள்ளார். கடந்த மாதம் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் விக்னேஸ்.
காதல் பிரச்சனை
அந்த ஊரில் அதே பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டதுள்ளது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற தொடங்கியிருக்கிறது. சில வாரங்களுக்கு பிறகு விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த இளம்பெண் விக்னேஸுடன் பழகுவதை தவிர்த்து இருக்கிறார்.

இது விக்னேஸ்வரனுக்கு கோவத்தை உண்டாகியுள்ளது. மீண்டும் அந்த பெண்ணிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக சொல்லப்பட்டுகிறது. அப்போது இத்தோடு தன்னை சந்தித்து பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார் அந்த இளம்பெண். இந்த வாக்குவாதம் இருவரிடையே பிரச்சனை மாறியது.
கடத்தல் முயற்சி
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விக்னேஸை இங்கு இருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும், விக்னேஸ் மீது பெண்ணின் பெற்றோர் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும், விக்னேஸை அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது விக்னேஸ்வரன், இனிமேல் அந்த பெண்ணிடம் தகராறு செய்ய மாட்டேன் என காவல்நிலையத்தில் வாக்குமூலம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் விக்னேஸ் அப்பெண்ணை கடத்த திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி கடந்த 12ம் தேதி அந்த பெண்ணை காரில் கடத்த முயற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளார். இதுகுறித்து மீண்டும் மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் தேடியாதால் விக்னேஸ்வரன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாக இருந்த விக்னேஸ் மீண்டும் அந்த பெண்ணை கடத்த திட்டம் போட்டார்.
மீண்டும் கடத்தல்
இம்முறை தன்னுடன் 14 பேரை சேர்த்து கொண்டுள்ளார். இதில் அவரது நெருங்கிய நண்பர்களான செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் என 15 பேரும் நேற்றிரவு ஒரு கார், பல பைக்குகளில் கிளம்பி உள்ளனர். மேலும், அரிவாள், கத்தி, உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களையும் எடுத்து சென்றுள்ளனர். அந்த பெண்ணின் வீட்டு வாசலில் கார், பைக்களை நிறுத்திவிட்டு வேகமாக வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டிற்குள் அப்பெண்ணும், அப்பெண்ணின் அம்மாவும் இருந்துள்ளனர்.

அம்மாவை தள்ளிவிட்டு அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமா வெளியே இழுத்து வந்து காரில் கடத்தினர். அப்போது அந்த பெண்,’என்னை காப்பாற்றுங்கள் ! காப்பாற்றுங்கள் !’ என கூச்சலிட்டார். விக்னேஸ் அப்பெண்ணின் வாயை பொத்தி காரில் ஏற்றி வேகமாக தப்பித்துவிட்டனர். அப்பெண்ணின் தாயார் உடனே மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்தனர்.
தாலி
போலீசார் பின் தொடர்ந்து வந்ததை அறிந்த விக்னேஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கார் சென்றுகொண்டு இருக்கும்போதே திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டினார். இதனை எதிர்பார்க்காத அந்த பெண் கதறி அழுதுள்ளார். மேலும், விக்னேஸுடன் வந்த 12 பேர் வரும் வழிலேயே தப்பி சென்றுவிட்டனர். காரில் விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அந்த பெண் மட்டும் சென்று கொண்டிருந்தனர்.

இதனிடையே, மயிலாடுதுறை போலீசார்யின் தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை பார்த்ததுமே காரை வேகமாக இயக்கியுள்ளனர்.
கைது
ஆனாலும் போலீசார் பின்தொடர்ந்து சென்று காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த விக்னேஸ்வரன், சுகாஷ்சந்திரபோஸ், செல்வகுமார் மற்றும் அந்த பெண் ஆகிய 4 பேரையும் விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
மயிலாடுதுறை போலீசாருக்கும் தகவல் தந்து வரவழைக்கப்பட்டனர். அந்த 4 பேரையும் மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். விக்னேஸ்வரன், செல்வகுமார், சுபாஷ்சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர். அப்பெண்ணை மீட்டு தாயிடமும் ஒப்படைக்கப்பட்டார்.

