குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய அருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் அதிகரித்து கொட்டுகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வர காலமாக மேற்கு தொடர்ச்சி மழையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வந்த மக்கள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

