காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தி
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 10, 2022