நாடு முழுவதும் நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியாய விலை கடைகள்
நகர்புறங்களில் இருப்பவர்கள் எளிதில் இணையவசதி பெற முடிகிறது. ஆனால் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இணைய வசதி கிடைப்பதில்லை. இதனால் நியாய விலை கடைகளில் இணையதள சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் நியாய விலை கடைகள் இருக்கின்றனர். குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நியாய விலை கடைகள் அமைந்திருக்கிறது.

ஆய்வுகள்
பி.எம் வாணி என்ற திட்டத்தின்கீழ் நியாய விலை கடைகளை இணையதள சேவை வழங்கும் பொது தரப்பு மையமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு இருந்தது.

மேலும், ஆய்வுகள் நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நியாய விலை கடைகளில் இணைய வசதி ஏற்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி நியாய விலை கடைக்கு அருகில் வசிப்போரும் இணையதள சேவை பயன்ப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்
நியாய விலை கடைகளுகளில் பொதுமக்கள் செல்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற உபகரணங்களை எடுத்து வந்து இணைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் நபர்கள் நியாய விலை கடைகளுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் வழியாக நியாய விலை கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கும் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளது. மேலும், அதிக இடவசதியுடன் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

