மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேற தடை
தவறான பொருளாதாரக் கொள்கையால் இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து விதமான அத்தியாவச பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்துக்கு பணிந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் 9ம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என பரவலாக செய்திகள் வெளியாகின. எனினும், மகிந்த ராஜபக்சே இலங்கையில் தான் தற்போது உள்ளார். அதேபோல், நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் இலங்கையில் இருக்கும் நிலையில், இருவரும் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட், மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் கோத்தபய ராஜபக்சே, இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

