பதவிக்கு ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். அதிமுக வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. பிற கட்சிகள் தயாரா ? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை கோரிப்பாளையம் அருகேயுள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அவர், மதுரை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள புதிய ஆணையர், பழைய ஆணையரை போல இல்லாமல் வேகமாக செயல்பட வேண்டும். எந்த மாநகராட்சியிலும் இல்லாத ஆணையருக்கு உதவியாளராக ‘சூப்பர் மேயர்’ என்ற ஒன்றை சட்டத்திற்கு புறம்பாக உருவாகியுள்ளனர். மேயருக்கு உதவி செய்யதான் ஆணையர் மற்றும் அதிகாரிகள் இருக்கும் பொது புதியதாக ஒரு பொறுப்பை யாருக்காக உருவாக்கியுள்ளார்கள்.
வேற்று வாக்குறுதிகள்
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற பட்டதாக அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. செல்லூர் ராஜூ, ‘ஐ .பெரியசாமி தனக்கு வேறு துறை கிடைக்காத கோபத்தில் முதல்மைச்சரை சிக்கலில் மாட்டி விடுகிறார். நீட் தேர்வு, ஏழுவர் விடுதலை, கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, டீசல் மானியம் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை’ என குறிப்பிட்டார்.
அமைச்சர்களின் ஊழல் பட்டியல்
தொடர்ந்து பேசிய அவர், ‘பாஜக மத்தியில் அட்சியில் உள்ளது திமுக அமைச்சர் குறித்த ஊழல் தொடர்பான விபரங்கள் அண்ணாமலைக்கு கிடைத்திருக்கலாம். அதன் அடிப்படையில் தான் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அவர் கூறிவருகிறார். திமுக ஒரு ஊழல் நிறைந்த கட்சி என்று அதிமுக பல வருடங்களாக கூறிவருகிறது.
சட்டசபையில் சென்சார்
தமிழகத்தில் அதிமுக தான் எதிர் கட்சி. திமுக அரசின் குற்றங்களை அதிமுக தான் அதிகமாக பொது மக்களிடம் சுட்டி காட்டிக்கிறது. சட்டசபையில் அதிமுக பேசும் பல பேச்சுக்கள் வெளியே வருவதில்லை. சினிமாவில் சென்சார் போடு இருப்பது போல சட்டசபையில் ஒரு சென்சார் போடு இருக்கிறது. பொன்னையன் கட்சி வளர்ச்சிக்கு வேண்டிதான் உறுப்பினர்கள் மத்தியில் அவ்வாறு பேசி வருகிறார்.
காக்கா கூட்டம்
பாஜக கட்சியை வளர்ப்பதற்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார். தமிழிசை மற்றும் எல் .முருகனுக்கு பதவி கிடைத்தது போல அண்ணாமலை தனக்கு ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்று எதோ அரசியல் செய்து வருகிறார். கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. ‘பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம், அதிமுகவிற்கு கூடுவது கொள்கை கூட்டம்’ .
தேர்தலில் தனித்து போட்டி
தேர்தலில் தனித்து நிற்க அதிமுக தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என ஒபிஸ், இபிஸ் கூற தயார். நாளைக்கே தேர்தலை வைத்து கொள்ளலாம். எல்லா கட்சியும் தனித்து போட்டியிடுவோம். அதிமுக தயார் மற்ற கட்சிகள் தயாரா ? இது என்னுடைய சொந்த கருத்து அல்ல அதிமுகவின் கருத்து. அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு வி.பி துரைசாமி வந்துவிட்டாரா ?. எங்கள் மேல் யாரும் துரும்பை வீசினால், பதிலுக்கு நாங்கள் தூணை கொண்டு எறிவோம்’ என மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.