ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடல் அட்டைகள் கடத்தல்
ராமநாதபுரம், தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடலோர காவல் நிலைய துணை ஆய்வாளர் அய்யனார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை ஒன்றை நிறுத்தி சோதனை ஈட்டனர். வாகனத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த சரக்கு வாகன ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கடல் அட்டைகள் அனைத்தும் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும், மேலும், இவற்றின் மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகின்றது.

