Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பும் வந்துவிடுகிறது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பும் வந்துவிடுகிறது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !

June 7, 20222 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பும் வந்துவிடுகிறது. தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ‘செவிடன் காதில் சங்கு ஊதியது போல இருக்கிறது’ என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘சமீபத்தில் சேலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளுக்கு மேல் நிரம்பும்படியான மேட்டூர் உபரிநீர் திட்டத்தை, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து, அதில் ஒரு பகுதி வேலைப்பாடுகள் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர்’ என குற்றஞ்சாட்டினார்.

EPS

பல திட்டங்கள்

மேலும், ‘எனது தலைமையிலான ஆட்சியில் பின்தங்கிய எடப்பாடி தொகுதிக்குள் மட்டும் பாலிடெக்னிக் கல்லூரி, பி.எட் கல்லூரி கட்டிக்கொடுத்தோம். நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. கால்நடை மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டிக்கொடுத்தோம். எடப்பாடி நகரத்தில் 30 வார்டுகளிலும் கூட்டு குடிநீர், நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். வணிகவளாகம், பாலங்கள், பூங்கா, நியாயவிலை கடைகள், எடப்பாடி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, தீயணைப்பு நிலையங்கள், தரமான சாலை வசதிகள், கூடுதலாக பேருந்துகள் என அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தோம். வேண்டுமென்றே என் மீது தவறான, பொய்யான தகவலை ஸ்டாலின் கூறியது கண்டிக்கத்தக்கது’ என்றார்.

இதையும் படிக்க :  “ஒரு கட்சியின் ஆட்சி இனிமேல் கூடாது” - கிருஷ்ணசாமி கறார்
நில அபகரிப்பு

‘திமுக ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பும் வந்துவிடுகிறது. அது அவர்களின் தொழிலாக உள்ளது எனவும் ஏழை எளிய மக்களிடம் இருந்து திமுகவினர் நிலங்களை மிரட்டி அபகரித்து வருவது கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தங்குதடையில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. இதனை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத நிலையில் உள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் செய்யமுடியவில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திசை திருப்புகின்றனர்’ என தெரிவித்தார்.

News cut

மக்கள் ஏமாற்றம்

‘திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி நகை கடன், பயிர் கடன், கல்வி கடன் வாங்கிய அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து விவசாய உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது. டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைப்போம் என சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசு ஊழியருக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டம், அகவிலைப்படிகூட கொடுக்க முடியவில்லை. கடந்த ஓராண்டில் எல்லா திட்டங்கள் செய்யப்பட்டதாக வெற்று விளம்பரங்கள் தான் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  ஜனாதிபதி தேர்தல் : தொடர்ந்து முன்னிலையில் திரௌபதி முர்மு !
Power Cut
மின்வெட்டு

திமுக தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து என்ன ஆனது ?’ என திமுகவை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ‘அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்ததைத்தான் திமுகவும் செய்து வருகிறது. திமுக ஆட்சியில் அதிகமான மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கே தமிழகம் தான் முதன்மை மாநிலம் என்று ஸ்டாலின் கூறினார். கடந்த ஓராண்டில் தமிழகம் ஊழலில்தான் முதன்மையாக உள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை

ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட வேண்டாம் என டிஜிபி கூறிவருகிறார். இந்த விளையாட்டில் முதலில் பணம் வரும், பின்னர் தற்கொலை செய்யகொள்ள ஏற்படும் சூழல் உருவாகும் என கூறுகிறார். ஆனால் தமிழக அரசு இந்த விசயத்தில் செவிடன் காதில் சங்கு ஊதியது போல இருக்கிறது’ என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Online Rummy

admk aiadmk CM stalin cm tamil nadu crime dmk dmk party dmk power cut edapadi palanisamy featured LAND GRABBING Tamilnadu tamilnadu politics எடப்பாடி பழனிசாமி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவயிற்றுப் பகுதியை வலுப்படுத்தும் வஜ்ராசனம்! – ஆரோக்கிய வாழ்விற்கான யோகாசன பயிற்சி
Next Article ஆன்லைன் ரம்மி விளையாட்டு – இளம்பெண் தற்கொலை !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,968 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.