Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»புற்றுநோயால் தவித்த மனைவி… கணவர் விபரீத முடிவு

புற்றுநோயால் தவித்த மனைவி… கணவர் விபரீத முடிவு

February 11, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், இருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெரம்பூர் பகுதியில் செபாஸ்டின் என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக, செம்பியம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் செபாஸ்டின் உயிரிழந்த நிலையிலும், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கேக் சாப்பிட்டு மயக்க நிலையிலும் கிடந்தது தெரிய வந்தது.

மயங்கிய நிலையில் கிடந்த மூவரையும் மீட்ட போலீசார், உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, செபாஸ்டின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நபர்களில் ஒரு குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, செபாஸ்டினின் மனைவி மற்றும் மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் செபாஸ்டின்(42). தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கு, ரெக்ஸி பியூலா (37) என்ற பெண்ணுடன் திருமணமாகி இவாஞ்சலின் (8), இமான் ஆண்டோ (4) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரெக்ஸி பியூலா, கடந்த சில மாதங்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக, பல இடங்களில் சிகிச்சை பெற்றும், எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வேதனையில் இருந்த செபாஸ்டின், மனைவிக்கு ஏதேனும் நேர்ந்தால் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என மேலும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருமணத்துக்கு மீறிய உறவை கண்டித்த கணவன் கொலை: மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
இது போன்ற சூழலில் தான், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கேக்கில் விஷம் தடவிக் கொடுத்த செபாஸ்டின், தானும் விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதில், கேக் சாப்பிட்ட அவரது மகன் இமான் ஆண்டோ உயிரிழந்த நிலையில், ரெக்ஸி பியூலாவும், இவாஞ்சலினும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிக்க :  கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை !

தற்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்று, அதில் இருவர் உயிரிழந்து, இருவர் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல.. வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060, இமெயில் மூலமாக help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம் அல்லது டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெறலாம்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநெல்லிக்காய் Vs எலுமிச்சை : ஆரோக்கியத்திற்கு தினமும் எது சாப்பிடுவது சிறந்தது?
Next Article அபிஷேக், பும்ராவின் உடல்நிலை குறித்து அப்டேட் வழங்கிய திலக் வர்மா

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.