தஞ்சை மாவட்டத்தில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பில் மஞ்சள் நோய்க்கு தாக்கியுள்ளதால் 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விவசாயிகள் கவலை
திருவையாறு அருகே வீரமாங்குடி, வில்லியநல்லூர், அனைக்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி உள்ளிட்ட 15 மேற்பட்ட கிராமங்களில்1000 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளன. கரும்பு பயிர்கள் அனைத்தும் விளைந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில்உள்ளது. ஆனால் திடீர் என்று மஞ்சள் நோய் தாக்கியதால் பயிர்கள் முற்றிலும் வாடி போய் இருக்கிறது. இதை குறித்து வேளாண்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கரும்புகளை பயிரிடாமல் வேறு பயிறுகளை பயிரிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ஏக்கருக்கு 50,000 ரூபாய் செலவு செய்துகரும்பு பயிர்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க வழியை சொல்லவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தமிழ்நாடு அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியில் மண் பரிசோதனை செய்து வேறு எந்த பயிர்களை பயிரிடலாம் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

