அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளன.
வருவாய்த்துறை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன. பின்னர் தலைமை அலுவலகம் வந்த ஓபிஎஸ் கடந்த சில மணி நேரமாக அதிமுக தலைமை அலுவலகத்திலேயே இருந்தார். அதன் பின்னர் சற்று நேரத்திற்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.
அதிமுக தலைமை கழக அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இரண்டு ஆதரவாளர்களுக்கு மோதல் உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை கழக அலுவலகம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியில் அரசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

