மாணவி ஸ்ரீமதியின் உடலை புதைக்க பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
உடல் புதைப்பு
மாணவி ஸ்ரீமதி இறப்பு முதல் தற்போது வரை குழப்பமான மற்றும் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது. ஆனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் மாணவி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருந்தார். இதனால், மாணவி உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்க்கபிக்கப்பட்டது. இன்று காலை மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால், தற்போது உடலை புதைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. திடீரென பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் பரிசோதனை செய்யும் வகையில் உடலை பரிசோதனை செய்வதற்காக புதைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உறவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

