
15ஆவது குடியரசுத் தலைவர்
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துவந்த நிலையில், அவருடைய பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது.
புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதியன்று நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றிபெற்றதை அடுத்து, அவருக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்
திரௌபதி முர்மு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
Met Smt. Droupadi Murmu Ji and congratulated her. pic.twitter.com/ALdJ3kWSLj
— Narendra Modi (@narendramodi) July 21, 2022
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்
‘இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்துகள். பழங்குடியின குடும்பத்தில் இருந்து நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகும் முர்மு கடின உழைப்பின் உருவகம்’ என ட்விட்டரில் தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
Congratulations to Smt Draupadi Murmu avl for being elected as the 15th President of India.
From a humble tribal family to becoming the country’s first citizen, Smt Draupadi Murmu is an epitome of hardwork. (1/2) pic.twitter.com/94PRw1IP77
— K.Annamalai (@annamalai_k) July 21, 2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்
‘இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பழங்குடியின சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு, செழிப்பான அரசியலமைப்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்த நீங்கள் துணை நிற்பீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Hearty congratulations to Hon’ble Droupadi Murmu avl on being elected to the highest constitutional position of India. Emerging from the oppressed sections of the society, we strongly believe that you will stand by silenced voices to ensure a thriving constitutional democracy. pic.twitter.com/vbQnPReb19
— M.K.Stalin (@mkstalin) July 21, 2022
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட்
’75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இத்தருணத்தில் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்து கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் அதுவும் நம் நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த தருணத்தில் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்துகொண்டிருக்கிறது.
(1/3) pic.twitter.com/aRqCLV8dym— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 21, 2022
இந்த தருணம் நாட்டில் உள்ள அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம்…
சவாலான இந்த உலகத்தில் குக்கிராமத்திலிருந்து குடியரசுத்தலைவராக உயர முடியும் என்பதை நம் இந்திய குடியரசு உணர்த்தியிருக்கிறது.
இது அனைவரும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டிய தருணமாகும்.(2/3)#PresidentofIndia #DroupadiMurmu
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 21, 2022
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்
‘தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு,
இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட,
பழங்குடி இனத்தவரின் பிரதிநிதி திருமதி.திரவுபதி முர்மு அவர்களுக்கு @AIADMKOfficial சார்பிலும்,
தமிழக மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.@rashtrapatibhvn pic.twitter.com/CzirhwmhZG— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 21, 2022
