அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடும் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு மூலமாக போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்கு தேவையான யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி போன்ற உரங்களை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு விற்றால், உர விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விலைக்கு உரம் விற்கப்பட்டால் அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம் என வேலூர் மாவட்ட வேளாண் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

