விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ வை வெளியிடுவதாக இருந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
திருமண நிகழ்ச்சி
இயக்க்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா, இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திருமண வீடியோவை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்ப இருந்ததாக கூறப்பட்டது. இதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடிக்கு டீல் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
ஓடிடி நிறுவனம்
இதனால் அந்த திருமண நிகழ்ச்சியில் செல்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில், 25 கோடி அதிகம் என்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பின் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் விக்னேஷ் சிவன் தனது திருமண புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருவதாக தெரிகிறது.

