மதுரையில் இன்ஸ்ட்டாகிராம் மற்றும் மெசஞ்சர் மூலமாக கஞ்சா விற்பனை செய்து வந்த மூன்று இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கஞ்சா விற்பனை
மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை பொருட்கள் சப்ளை செய்து வருவதாக மதுரை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, கோரிப்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூன்று மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சுமார் 1.5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் மதுரை பசுமலை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் மெசஞ்சர் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.
கேட்பவர்களுக்கு நேரில் சென்று கஞ்சா விநியோகம் செய்து பணம் பெற்று வந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

