Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»சென்னை தனியாக வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பிணமாக மீட்பு

சென்னை தனியாக வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பிணமாக மீட்பு

March 19, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை ஆதம்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 மாதங்களாக தனியாக வசித்து வந்த நபர் வீட்டின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆலந்தூர் அடுத்த ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் தீபக் (42). இவர் பிறந்த ஒரு வருடத்திலேயே அவரது தந்தை டேவிட் மற்றும் தாயார் நான்சி இருவரும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இமானுவேல் தீபக் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த 15 வருடங்களாக அதற்கான சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இமானுவேல் தீபக், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தை வைத்து, ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பத்து மாதங்களாக வாடகைக்கு இருந்து வந்துள்ளார். மேலும் அவரது வாடகை வீட்டின் எதிரில், அவரது சித்தி ஷீபா என்பவர் வசித்து வந்த நிலையில், தினமும் அவரது வீட்டில் இமானுவேல் தீபக் சாப்பிட்டு வந்துள்ளார்.

இதையும் படிக்க :  கோவை இருகூர் அருகே இளம்பெண் கடத்தல்

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இமானுவேல் தீபக் ஷீபாவின் வீட்டிற்கு சாப்பிட வராததால், அவர் தனது சகோதரியான வண்டலூரில் வசித்து வரும் ஜூடி என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்று ஜூடி இமானுவேல் தீபக் வசிக்கும் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்துள்ளது. கதவு திறக்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இமானுவேல் தீபக், படுக்கை அறையின் கழிவறையில் நிர்வாணமாக மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை சோதித்தனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படிக்க :  திருப்பூர் : பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி !

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து 194 BNS என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாணவி கொலையில் யாரும் கைதாகவில்லை; காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
Next Article சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை போலீசில் ஒப்படைத்த கூலித் தொழிலாளி

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.