மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, ஆற்றின் கரையோரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் வெள்ளம்
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை தீவிரமாக பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியில், 70 அடியை எட்டியுள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,754 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், வைகை ஆற்றின் கரையோரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

