70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி காரணமாக இத்தாலியில் அவசர நிலையைப் பிரகடனம் அறிவிப்பு.
அவசர நிலை பிரகடனம்
இத்தாலியில் மழையின்மை மற்றும் வெப்ப அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி இத்தாலியில் நிலவிவருகிறது. இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியைச் சுற்றியிருக்கிற 5 வடக்கு பிராந்தியங்களை வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தாலி அரசு இப்பகுதிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிவரை அவசர நிலையைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் மேலாக விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியை அறிவித்தது. நிலைமை சீரகாத நிலையில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

