வாரிசு மற்றும் வாத்தி படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தும்படி தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
வாரிசு படம்
நடிகர்களின் சம்பளம், விநியோகஸ்தர்கள் நஷ்டம், தொழிலாளர்களின் போராட்டம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த திங்கட்கிழமை முதல் திரைப்பட தயாரிப்பை நிறுத்துவது என்று தெலுங்கு சினிமாவின் 24 சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளது. அதனையடுத்து விஜய், தனுஷ் படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பலரும் குற்றச்சாட்டுகள் எழுப்பினர்.
படப்பிடிப்பு ரத்து
இதன்படி விஜய் நடித்து வரும் வாரிசு மற்றும் தனுஷ் நடித்து வரும் வாத்தி படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், நான் தயாரிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டேன். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு தமிழ் படம் என்பதால் அதன் படப்பிடிப்பை நிறுத்தவில்லை’ என்று கூறியுள்ளார்.

