நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
விஜய் சேதுபதி
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து மகா காந்தி என்பவர் திடீரென தாக்கினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாக தொடங்கியது இதனைத்தொடர்ந்து, மகா காந்தி கவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரின் உதவியாளருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
மேலும், மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜய் சேதுபதி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

