Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, August 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»அரவக்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட விவகாரம்: இறுதி சடங்கில் பரபரப்பு

அரவக்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்ட விவகாரம்: இறுதி சடங்கில் பரபரப்பு

March 11, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வாகன விபத்தில் உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூர் கிராமம் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (64). கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இதனிடையே, கடந்த 4ஆம் தேதி காலை 11 மணியளவில், சுக்காலியூர் ரவுண்டானா வழியே கரூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, செல்லாண்டிபாளையம் அருகே ஆனந்தராஜின் இருசக்கர வாகனத்தை முந்திச் சென்ற லாரி ஒன்று, எந்தவித சிக்னலும் காட்டாமல் திடீரென இடது பக்கமாக திரும்பியதாக தெரிகிறது. இதில், லாரியில் அடிபட்ட ஆனந்தராஜ், படுகாயத்துடன் கரூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிக்க :  புற்றுநோயால் தவித்த மனைவி... கணவர் விபரீத முடிவு

எனினும், சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன்பு (மார்ச் 8) சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் உயிரிழந்தார். தொடர்ந்து, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அன்று மாலை அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்ததும், ஆனந்தராஜின் சொந்த கிராமமான புத்தாம்பூர் காளிபாளையம் சுடுகாட்டுக்கு அவரது உடல் அடுத்த நாள் இரவு 9 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அவரது முகத்தை நன்றாக பார்த்த உறவினர் ஒருவர், இது ஆனந்தராஜின் பிரேதம் இல்லை என கண்டுபிடித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க :  விளையாட்டாக தள்ளிவிட்டதில் விபரீதம்... சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் பிரிந்த சிறுவன் உயிர்!

இது தொடர்பாக, தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில், சுடுகாட்டில் எரியூட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆனந்தராஜ் உடலை மீட்ட போலீசார், மீண்டும் இரவோடு இரவாக மதுரைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் இறந்த தேவேந்திரனின் உடல்தான், ஆனந்தராஜ் குடும்பத்தாரிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு தேவேந்திரன் குடும்பத்தாரிடமிருந்த ஆனந்தராஜனின் பிரேதம் மீட்கப்பட்டு, மீண்டும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆனந்தராஜனின் குடும்பத்தினர் மீண்டும் இறுதிச்சடங்கு செய்து, உடலை தகனம் செய்தனர். பிரேதத்தை மாற்றி ஒப்படைத்தது சம்பந்தமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
Next Article நடிகரும், தயாரிப்பாளருமான தக்காளி சீனிவாசன் காலமானார்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,851 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,141 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,053 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,851 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,141 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,053 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.