காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை தொடர்கிறது.
மேகதாது அணை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் டிஜிஓட்டறிந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் கடந்த 20ம் தேதி, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடை இல்லை. மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம், ஆனால் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த முடிவும் ஆணையம் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேகதாது அணை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை தொடர்கிறது.

