அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்சஒழிப்புத்துறை
மன்னார்குடியில், அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும 49ம் இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட 49 இடங்களில் காலை முதலே இந்த சோதனை நடந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அப்போது அரசுப்பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக அசையும், அசைய சொத்துக்களை அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், 58,44,38,752 ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது.அதன அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு குறிப்பிடத்தக்கது.

