Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Facebook X (Twitter) Instagram
Monday, November 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»குருவாயூரப்பா! திருவருள் தருவாய் நீயப்பா!! – குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தல வரலாறு

குருவாயூரப்பா! திருவருள் தருவாய் நீயப்பா!! – குருவாயூர் கிருஷ்ணர் கோவில் தல வரலாறு

May 25, 20222 Mins Read306 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருமாலின் உலகமாக கருதப்படும் வைகுண்டம், சொர்க்கமாக போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாக போற்றப்படும் ஒரு கோவில் இந்த பூ உலகில் உள்ளது என்றால் அது தான் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில்.

வைணவர்களின் புனித தலமாக போற்றப்படும் இந்த கோவில் 108 திவ்ய தேசக் கோவில்களில் இடம் பெறவில்லை. ஆனால் அதையும் கடந்து இது பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த கோவில் குருவாயூரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் அவதாரம் எடுப்பதற்கு சற்று முன்பு தன் தந்தையான வாசுதேவருக்கும் தாய் தேவகிக்கும் குருவாயூரில் தான் எப்படி உள்ளாரோ அதே போல காட்சி அளித்துள்ளார்.

அதனால் இந்த கோவில் தென் துவாரகை என்றும் போற்றப்படுகிறது.

குருவாயூர் கோவில் குளத்தில் சிவபெருமான் ருத்ரனாக இருந்து மகாவிஷ்ணுவை போற்றி கடும் தகவல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த குளத்தின் தீர்த்தமானது ருத்ர தீர்த்தம் என்று போற்றப்படுகிறது.

இதையும் படிக்க :  நீதிபதிக்கு கோரிக்கை வைத்த திரைப்பிரபலம் : வைரல் பதிவு!

புண் முறுவலோடும் கம்பீர தோற்றத்தோடும் இங்கு காட்சி தரும் கிருஷ்ணர், தனது நான்கு கரங்களில் சங்கு,சுதர்சன சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறார்.

இந்த கோவிலில் உள்ள மூலவரின் விகிரகத்திற்கு தனி சிறப்பு உண்டு. இதை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவே படைத்து அதை சிவனிடமும் ப்ரம்ம தேவனிடமும் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

தல வரலாறு :

சுதபர் என்னும் அரசன் தன் மனைவியோடு குழந்தை வரம் வேண்டி பிரம்ம தேவனை நோக்கி தவம் இருந்தார். தவத்தை மெச்சிய பிரமதேவன் அவர்களிடம் இந்த விக்ரகத்தை கொடுத்து பூஜிக்க கூறினார்.

அதன்படி அவர்கள் பூஜிக்கையில் மகாவிஷ்ணுவே வந்து அவர்களுக்கு மகனாக மூன்று முறை வெவ்வேறு காலகட்டத்தில் பிறப்பதாக வரம் அளித்தார்.

இதையும் படிக்க :  சங்கரன்கோவிலில் கோலாகலமாக ஆடித்தபசு தேரோட்டம் - சுற்றுவட்டார பக்தர்கள் சுவாமி தரிசனம் !

அதன் படியே அவர் பிரசனிகர்பராகவும், வாமனராகவும், கிருஷ்ணராகவும் அதே தம்பதிக்கு வெவ்வேறு யுகத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது.

கிருஷ்ணாவதாரம் முடியும் தருவாயில் அந்த விக்கிரகம் உத்தவரிடம் கொடுக்கப்பட்டது. துவாரகையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் துவாரகை கடலில் மூழ்கிப்போக இந்த விக்ரகம் கடலில் மிதந்தவண்ணம் இருந்தது.

இதை கண்ட வாயுவும் குருவும் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ய ஒரு நல்ல இடம் தேடி உலகெங்கும் சுற்றி வந்தனர். அவர்கள் பரசுராமரை பாலக்காட்டில் சந்தித்தனர். அனைவரும் சேர்த்து ஒரு நல்ல இடத்தை தேடினர்.

அங்கு இருந்த ஒரு குளத்தில் சிவபெருமான் வாசம் செய்வதை உணர்ந்த அவர்களுக்கு சிவன் பார்வதியோடு தரிசனம் தந்து அங்கேயே விக்ரகத்தை பிரதிஷட்டை செய்ய ஆசியும் வழங்கியுள்ளார்.

இத்தகைய சிறப்பு பெற்றது குருவாயூர் கோவில் மூலவர் விக்ரகம். இப்படி பல சிறப்புக்கள் நிறைந்ததாலேயே குருவாயூர் கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.

featured Guruvayur Temple Kerala mythology spirituality vaishnavism
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகாஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்; காவலர் ஒருவர் சுட்டுக் கொலை!
Next Article பெட்ரோல் டீசல் விலை குறைவு எதிரொலி; தக்காளி விலை சரிவு!

Related Posts

Editor's Picks

மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது

November 15, 2025
Editor's Picks

பூடான் மன்னருடன் காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி

November 12, 2025
Editor's Picks

கே.என்.நேரு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 44 லட்ச ரூபாய் நன்கொடை

November 11, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Our Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.