இலங்கையில் இருந்து சீன உளவு கப்பல் கிளப்பியது என துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சீன உளவு கப்பல்
இலங்கை, அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன உளவு கப்பல் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில், 6 நாட்களாக இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சீன உளவு கப்பல் தனது ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு இன்று புறப்பட்டது. இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து மாலை 4 மணிக்கு சீன உளவு கப்பல் புறப்பட்டது என துறைமுக அதிகாரி கூறியுள்ளார். இதன் மூலம் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த சீன உளவு கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டதால் இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றம் குறைந்துள்ளது.