சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என ராகுல்காந்தி பேசியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘மோடியின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் சந்தித்திருக்கிறோம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கி செங்கல் செங்கலாக கட்டப்பட்ட இந்தியா, உங்கள் கண் முன்னே வீழ்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் மக்கள் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, சமூகத்தில் வன்முறை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பப்படக் கூடாது என்பதே அவர்களது திட்டம். இந்தியாவில் இருக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுறது. ஆர்.எஸ்.எஸ்.யின் கருத்து இந்திய இறையாண்மைக்கு எதிரான ஓன்று. அதை தொடர்ந்து நான் எதிர்க்கப்போகிறேன். இதனால் என் மேல் என்ன மாதிரியான விளைவுகள் வந்தாலும் நன் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

