சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உலக செஸ் வீரர்கள் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற நாளை மறுநாள் தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 187 நாட்டை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டி தமிழகத்தில் நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக அங்கோலா நாட்டு செஸ் வீரர்கள் காலை தமிழகம் வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த வீரர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னத்திற்கு அருகில் நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கு தமிழக அரசால் வரவேற்கப்பட்டது.

