சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
ஜெயராமன் பேச்சு
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு எடப்பாடி பழனிச்சாமி தான். இதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்படி விரைவில் அங்கீகரிக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கும். தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மக்கள் ஒரு வித அச்ச உணர்வோடு வாழ்கிறார்கள்.
சமீப காலமாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

