அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவியை அலுவலகத்தின் மேலாளரிடம் அதிகாரிகள் இன்று ஒப்படைக்கவுள்ளனர்.
அலுவலக சாவி ஒப்படைப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றன. அப்போது கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவலாளர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். இதனால், அப்பகுதியே போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து அதிமுக அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவின் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இன்று காலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அதிமுக அலுவலகத்தில் இருந்த சீலை அகற்றி, சாவியை அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளார். இதனால் 10 நாட்களாக பூட்டப்பட்டிருந்த கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், மீண்டும் இரு ஆதரவலாளர்களிடையே இடையே மோதல் ஏற்பட்டு வாய்ப்பு இருப்பதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

