ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றதை கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்
இந்திய நாட்டின் 15வது புதிய ஜனாதிபதியாக பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இதனைக் கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பாக பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு குடியரசு தலைவராக வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஒரிசா மாநில பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டதைக் கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பகுதியில் ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெரும் விமர்சையாக நடந்த நிகழிச்சியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்துக் கொண்டனர்.

