கருணை அடிப்படையில் முதல்முறையாக 10 மாதக் குழந்தைக்கு வேலை வழங்கியுள்ளது இந்திய ரயி்ல்வே துறை.
அரசு துறையில் வேலை செய்பவர்கள் பணியின்போது உயிரிழந்து விட்டால் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில பிஹாலி பகுதியில் உள்ள ரயில்வே துறையில் ராஜேந்திர குமார் என்பவர் வேலை செய்துள்ளார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் ராஜேந்திர குமார் தனது மனைவி, 10மாத பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் கணவன்,மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக அந்த 10மாத குழந்தை மட்டும் உயிர் பிழைத்துக்கொண்டது.
இதனால் ராஜேந்திர குமாரின் 10 மாத குழந்தைக்கு கருணை அடிப்படையில் தென்கிழக்கு மத்திய ரயில்வே பணியாளர்கள் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததும் அவர் ரயில்வே வேலைக்கு சேர்த்துகொள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.

