ராகுல்காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
ரவிசங்கர் பிரசாத் பதிலடி
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது. ஜனநாயகத்தின் மரணத்தை நாம் சந்தித்திருக்கிறோம். இந்தியாவில் இருக்கும் ஒரு சில பணக்காரர்களுக்கு மட்டும் தான் இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது’ என பேசியுள்ளார்.
இதற்கு பாஜக ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘உங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளதா ? நாடு சர்வாதிகாரத்தைப் பார்த்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சி காலமான எமர்ஜென்சி காலத்தில் தான். ராகுல் காந்தி எங்களுக்கு ஜனநாயகம் பற்றி போதிக்க வேண்டாம். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியின் மவுனம் ஏன் ?. அவர் உண்மையை மட்டும் பேசுபவர் என்ற ஏன் ? ஜாமீனில் இருக்கிறார் என்பதற்கு பதில் கூற வேண்டும். அவர் எந்த குற்றத்திற்கு ஜாமீனில் இருக்கிறார் ?. காங்கிரஸ் தலைவருக்கு அரசியலில் தீவிரம் இல்லை. அரசு அமைப்புகளை குறை கூற வேண்டாம். உங்களை காப்பாற்றிக்கொள்ள அமைப்பை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்’ என்று மிக கட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

