காலணியை பாதுகாப்பாக உள்ளது எனவும் உரியவர் திரும்பப் பெற விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் ட்விட் செய்துள்ளார்.
அமைச்சர் ட்விட்
காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. இச்சம்பவம் அந்தப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதை கண்டித்து திமுகவினர் மதுரையில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்கள் மீது மதுரை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பதிவில், ‘நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுகிறேன். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்த பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார் ? . காலணி உரியவர் காலணியை திரும்பப் பெற விரும்பினால், எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்’. உரியவர் பெற்றுக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
I’ll have more to say about yesterday’s events later, but for now….
If the missing “Cinderella of the Old Airport Terminal”, who was “allowed” hundreds of meters into the “secured” area along with tens of her party members🤔, wants her sandal back…my staff saved it for you pic.twitter.com/kgBUsNkHVo
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) August 14, 2022

