மனைவியை சமாதானப்படுத்த 3 நாட்கள் விடுப்பு கேட்டு அரசு ஊழியர் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.
விடுப்பு கடிதம்
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுப்பு எடுப்பதற்கு பல்வேறு வேடிக்கையான காரணங்களை கூறுவது வழக்கம். இதில் சில கரணங்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் உத்தரபிரதேசம் கான்பூரில் அரசு கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஷம்ஷாத் அகமது என்பவர் விடுமுறை கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘எனது மனைவி கோபித்து கொண்டு தனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் எனது மனைவியை சமாதானப்படுத்த கிராமத்தில் இருக்கும் அவரது தயார் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து வர வேண்டும். இதற்காக ஆகஸ்டு 4 முதல் 6 வரை விடுப்பு வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

