நாளை நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்கள்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் விருந்தினர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

