திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐடி ரெய்டு
தமிழ் திரைத்துறையில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ்.தாணு. இவர் கடந்த 40 வருடங்களாக சினிமா துறையில் சிறந்து விளங்கி வருகின்றார். இவருடைய சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது. இந்நிலையில், தி.நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 20 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சினிமா துறை சேர்ந்தவர்கள் இடங்களில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

