Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, April 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»15வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ‘பவாரியா’ கும்பல் தலைவன் சென்னையில் கைது!

15வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ‘பவாரியா’ கும்பல் தலைவன் சென்னையில் கைது!

April 8, 20222 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை 20 வருடங்களுக்கு பிறகு நேற்று தனிப்படை காவல்துறையினர் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவரது வீடு சீலநாயக்கன்பட்டிக்கு அருகே உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு அதிகாலை தாளமுத்து நடராஜன் வீட்டிற்கு வந்த கொள்ளை கும்பல் வீட்டின் காவளாளி கோபாலை கொன்றுவிட்டு வீட்டின் கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைந்தது.

தடுக்க முயன்ற தாளமுத்து நடராஜனை துப்பாக்கியால் அடித்து கொலை செய்தது. சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட சொட்ட தாளமுத்து நடராசன் கொடூரமாக உயிரிழந்தார்.

வீட்டில் இருந்த பல கோடி மதிப்பிலான தங்க நகைள், வெள்ளிகள், பண கட்டுகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லாரி கேங் என்று அழைக்கப்படும் “பவாரியா” என்ற கொள்ளை கும்பல் இதுபோன்ற கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும், இக்கும்பல் திருவள்ளூர் பெரியபாளையம் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் உட்பட தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு கொண்டவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  ம.பி.யின் போஜ்சாலா கட்டிடத்தில் கோயில் இருந்ததா? - ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்ய முடிவு

இதையடுத்து போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை இவர்களை தேடத்தொடங்கியது. கைரேகை அடிப்படையில் இவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்த தேடுதல் வேட்டை நீண்ட நாட்களுக்கு நடந்தது. ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நாட்களில் அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் ஒருவரை சுட்டுக் கொன்று மற்றவர்களை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

பவாரியா கும்பல் தலைவனான ஓம்பிரகாஷ், அசோக், ராகேஷ் குண்டு, ஜெயில்தார்சிங், பப்லு, பீனாதேவி, சந்து ஆகிய 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பவாரியா கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ்குண்டு, ஜெயில்தார்சிங் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சிறையில் இருக்க முடியாமல் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிக்க :  பள்ளிகள் விடுமுறை : 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கையா ? - பள்ளிக்கல்விதுறை விளக்கம் !

இந்த வழக்கில் ஓம்பிரகாஷ் மருமகன் ஜெயில்தார்சிங், மனைவி பீனாதேவி, சகோதரி சந்து மற்றும் பப்லு ஆகியோர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த கொலை சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வழக்கை விரைந்து முடிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் இன்பார்மர்கள் மூலம் ரகசிய தகவல் கிடைக்க, தேனாம்பேட்டையில் வைத்து ஜெயில்தார்சிங்கை கைது செய்து சேலம் அழைத்து சென்றனர் போலீசார். அவரிடம் துணை ஆணையர் மோகன்ராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் 4 ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து இந்த வழக்கு வரும் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த 15 வருடம் பவாரியா கும்பலின் தலைவனான ஜெயில்தார்சிங் என்ன செய்துகொண்டு இருந்தான் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Bawaria Chief Bawaria Gang bawaria gang zaildar singh theeran adhigaram ondru
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு.. டிடிவி தினகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்!
Next Article இந்தி_தெரியாது_போடா என “அமித் ஷா”வுக்கு பதிலடி கொடுக்கும் தமிழர்கள்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,449 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,988 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.