போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்டு ஏழு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி காட்டியுள்ளனர்.
குட்கா விற்பனை
தேனி, போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளிலான சிலம்பரத்துப்பட்டி மீனாட்சிபுரம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட வந்த கடைகளை தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராகவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் துறை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர்.
போடி, மீனாட்சிபுரம் மற்றும் சிலமரத்துபட்டி பகுதிகளில் முதல் கட்டமாக ஏழு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக குட்கா, பான் மசாலாக்களை போன்ற பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டால் உடனடியாக அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது போடி வட்டார உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சரண்யா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

