சூர்யாவுக்கு நன்றி
‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தில் சித்தி இத்தானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சிம்பு, சூர்யாவின் வாழ்த்துக்கு, “மிக்க நன்றி அண்ணா” என்று பதிவிட்டுள்ளார்.

