குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 நபர்கள் இறந்துள்ளனர்.
கள்ளச்சாராயம்
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 21 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. சுமார் 30நபர் இன்னும் பல இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 28 நபர்கள் இறந்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

