முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஸ்டாலின் டெல்லி பயணம்
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் உள்ள தலைநகர் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று மாலை டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோருக்கு தனி தனியாக வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்ததற்கும், வாழ்த்தியதற்கும் நன்றி தெரிவிக்கிறார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து மனு அளிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

