பாஜகவில் எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சியாக ஒருபோதும் இருக்காது என பாஜக அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, அந்த முன்னுரையில் அம்பேத்கரின் வாழ்வியல் சித்தாந்தங்களை, நரேந்திர மோடி செய்து கொண்டிருக்கிறார் என கூறினார். அதே இளையராஜா கோவையில் தன்னுடைய பிறந்தநாள் அன்று மாநில அரசை பற்றி கூட பேசியிருந்தார். அதேபோல பிரதமர் மோடியை பற்றி பேசினாலும், அதுவும் அவருடைய தனிப்பட்ட கருத்தாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறினார்.
பாஜகவை பொறுத்தவரை எந்தவிதமான தனிமனிதனையும் அடையாளப்படுத்தி வளருகின்ற கட்சியாக ஒருபோது இருக்காது. இங்கு தனி ஒரு மனிதனுக்கு வேலை கிடையாது. பாஜகவை பொறுத்தவரை புதியதாக இளைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கான வாய்ப்புகளும் இங்கே இருக்கும். பாஜக மக்களின் ஆதரவை பெற்றே ஆட்சிக்கு வர நினைக்கிறது’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

