நடிகர் மாதவன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் முதல் முறையாக இயக்கி நடித்த படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இதை விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுத்திருந்தார். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில், ராக்கெட்ரி படத்தை எடுப்பதற்காக மாதவன் தனது வீட்டை விற்றார் என்று கூறப்பட்டது.
விளக்கம்
இதற்கு நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், ‘நான் எனது வீட்டை இழக்கவில்லை. அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். இதனால் ராக்கெட்ரி படத்தில் வேலை செய்தவர்கள் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Oh Yaar. Pls don’t over patronize my sacrifice. I did not lose my house or anything. In fact all involved in Rocketry will be very proudly paying heavy Income Tax this year. Gods grace 😃😃🙏🙏🇮🇳🇮🇳🇮🇳We all made very good and proud profits. I still love and live in my house .🚀❤️ https://t.co/5L0h4iBert
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 17, 2022

