ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும், எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு
ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இட வேண்டும். பள்ளி மாணவர்கள் இனிஷியல் முதற்கொண்டு தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் இதனை பின்னப்பற்ற வேண்டும். அனைத்து பதிவுகளிலும் பெயர்களை தமிழில் எழுதப்படுகிறது என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

