எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் இனிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு
பால், தயிர், இனிப்பு வகைகள் போன்ற ஆவின் பொருட்கள் தனியாரை விட தரமாகவும், விலை குறைவாக இருப்பதால் பொதுமக்களிடம் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நெய், தயிர், மோர் பால் ஆகிய ஆவின் பொருட்களின் விலையை அரசு உயர்த்தியது. அதனைத்தொடர்ந்து தற்போது இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் நிர்ணயிக்கப்பட்ட புதிய விலையில் விற்பனையாகும் என நிர்வாக இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

