திருப்பதியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் திடீரென சிறுத்தை புகுந்ததால் அந்த பகுதி பரபரப்பானது.
வனவிலங்குகள்
திருப்பதி அலிப்பிரி நடைப்பாதை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அங்கேயுள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வனப்பகுதிக்கு அருகில் இந்த கல்லூரி அமைந்து இருப்பதால் வனவிலங்குகள் கல்லூரி வளாகத்திற்குள் வருவது வாடிக்கையாகி இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மாணவர்கள் தூங்க சென்றபோது திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மாணவர்கள் கல்லூரி விடுதியிலன் மாடியில் இருந்து பார்த்தபோது வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக திரிந்து கொண்டு இருந்தது.
வனத்துறை
சிறுத்தையை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் விடுதிக்குள் சென்று கதவு, ஜன்னலை அடைத்துக்கொணடனர். மேலும், மாணவர்கள் இது தொடர்பாக வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவத்துக்குள் அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

