சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே. சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
2வது விமான நிலையம்
சென்னையில் மீனம்பாக்கத்தில் காமராஜர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் விமானப் போக்குவரத்தை அதிகப்படுத்தவும், விமான போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு வகையில் 2வது விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களை தேர்வு செய்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இது குறித்து தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே. சிங், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் 2 வது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார். இந்த இடம் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குறிபிடத்தக்கது.

