நாளை நடைபெறவிருக்கும் குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு
தமிழக அரசின் பல துறைகளில் பணியாற்ற டின்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்களும், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்களும் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில் காலை 9 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதேபோல் 12.45 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டை கட்டாயமாக தேர்வறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

