தமிழக உளவுத்துறை ஐஜி அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் போராட்ட சம்பவம் பெரும் வன்முறையாக மாறியது. இதனையடுத்து அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டு வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை சிறப்பு குழு விசாரித்து வருகின்றன. இந்நிலையில், தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்கு தமிழக காவல் துறையின் உளவுத்துறை பிரிவு சரிவர செயல்படாததும், மாவட்ட காவல் துறையின் மெத்தப்போக்கும் தான் காரணம் என்று பலதரப்பட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்தும், கேள்வி எழுப்பியும் வருகின்றன.
இதனால் உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் ஐபிஎஸ் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து அமலாக்கத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, உளவுத்துறை புதிய ஐஜியாக செந்தில்வேலன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை திருவல்லிகேணி துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த பகலவன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

